‘கம்பளை ஆண்டியாகடவத்தை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

‘கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு’ எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பெருநாள் பிரசங்கத்தின் பிறகு இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த விழாவின் போது பிரதம அதிதியாக கொழும்பு ரிஸானா ஜேம்ஸ் மற்றும் ஜீவல்ரி நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ். ஜே. எம். இம்தியாஸ், நூல் அறிமுகத்திற்காக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ‘சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினர்களது சுமார் மூன்று வருடகால கடும் முயற்சியின் விளைவாக இந்நூல் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...