‘சாகும் வரை கற்க வேண்டும்’ :க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 74 வயது முதியவர்

Date:

காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச களுபோவிட்டியனைச் சேர்ந்த 74 வயதான சந்திரதாச கொடகே நேற்று (மே 28) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சந்திரதாச கொடகே விண்ணப்பித்திருந்ததாகவும், அதன்படி அவர் நேற்று விஞ்ஞான பாடத்திற்கு தோற்றியுள்ளார்.

அதேநேரம், அவர் நாளைய தினம் (மே 30) கணிதப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்திற்கு தோற்றி ‘எஸ்’ (S) சித்தியைப் பெற்றிருந்தார்.

‘எனக்கு இப்போது 74 வயதாகிறது. அலபலதெனிய மகா வித்தியாலயத்தில் படித்தேன் 1970 ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினேன். அந்தத் தேர்வில் ஏழு பாடங்களில் நான்கு பாடங்களுக்கு சித்தி கிடைத்தன.

ஆனால், அப்போதைய அழுத்தத்தால் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.
நான் சுய திருப்திக்காகவும், வேடிக்கைக்காகவும் தேர்வு எழுதுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும், புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவு கிடைக்கிறது. எனக்கு அறிவியல் பாடத்தில் பொது அறிவு உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த முறை அறிவியல் வினாத்தாள் கடினமாக உள்ளது. பரீட்சைக்கு அமர்வதோடு மட்டும் கற்றலை மட்டுப்படுத்த முடியாது.

சாகும் வரை கற்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளன, இப்போது தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறிவிட்டது, நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறை உள்ளது.

அன்றைய தினம் போல் அல்லாமல், தற்போது பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க ஏராளமான வசதிகள் உள்ளன. அப்போது எங்களுக்கு எந்த வசதியும் இல்லை. இப்போது பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஊடகங்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...