மல்வானை பகுதியில் அமைந்துள்ள பசில் ராஜபக்சவின் வீட்டின் மீது தாக்குதல்!

Date:

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மல்வானையில் உள்ள வீடு ஒன்று இன்று மக்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்தை வீட்டை முற்றுகையிட்டு கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர்.

கொழும்பு அலரி
மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு என கூறப்படும் வீட்டின் மீது பிரதேச மக்கள் வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான இந்த காணியில் மக்கள் வந்து வீடுகளை அமைத்து குடியேற வேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...