‘கொழும்பில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுங்கள்’: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Date:

கொழும்பில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிடுமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

15/3, வஜிர வீதி, கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றாடல் ஆர்வலர் ரஞ்சித் சிசிர குமார ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு, கொள்ளுப்பிட்டி கோட்டைப் பகுதி மற்றும் அலரிமாளிகையை அண்மித்த பகுதிகளில் பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளினால் பொதுமக்களின் நடமாடும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே இந்த வீதித் தடுப்புகள் அமைக்கப்படுவதற்கான காரணம் என நம்புவதாகவும், அந்த உத்தரவுக்கு அமைய 16 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த மனுக்களை விசாரணைக்குட்படுத்துமாறும், இந்த நிரந்தர வீதித் தடைகளை பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்குமாறும், அந்த வீதித் தடைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...