திங்கள் முதல் லிற்றோ எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் அதுவரை வரிசையில் நிற்க வேண்டாம்!

Date:

விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் இரு நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என லிற்றோ அறிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக லிற்றோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் அந்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் எனவும் லிற்றோ நிறுவனத் தலைவர் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் நேற்று பொதுமக்களைக் கோரியது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை...