வியாபார நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை: ஹர்த்தால் தொடர்பில் பொலிஸ் விசேட அறிக்கை!

Date:

இன்று நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வணிக நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரச்சாரம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிப்பதை இலங்கை பொலிஸ் என்றும் தடையாக இருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை அனுபவிக்கிறோம் என்ற போர்வையில், பிற குடிமக்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை மீறக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஹர்த்தால் போராட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பாத குழுக்களை இயக்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன், தமது வர்த்தக நிலையங்களை திறக்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறானவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...