திஸ்ஸமஹாராம பகுதியில் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Date:

திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரவில கால்நடைச் சபைக்கு சொந்தமான பண்ணைக்கு விஜயம் செய்ய அவர் செல்லவிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திஸ்ஸமஹாராம பொலிஸார் மற்றும் வீரவில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று மாநாடு:புதிய தலைமுறையைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் நபிகளாரின் வழிகாட்டல் அவசியம் என வலியுறுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் பூட்டான் பயணம்!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை மற்றும் பலத்த காற்று...

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...