அலரிமாளிகையில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருட்டு: ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு

Date:

அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையை ஆக்கிரமித்து வருவதால், அலரிமாளிகை வளாகத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை அறிய முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அலரிமாளிகையில் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பல சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...