ஜூலை மாதத்தில் மட்டும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

Date:

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தடுப்பூசியைப் பெறக்கூடியவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர்) பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இன்னும் சிலருக்கு முதல் டோஸ் கூட எடுக்கப்படவில்லை என்று மருத்துவர் கூறினார்.

குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார சட்டங்களின்படி மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...