கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு: சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு கௌரவம்

Date:

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு கடந்த 30 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது பிரதேச செயலாளராக இருந்து சாய்ந்தமருது மண்ணுக்கு வேற்றுமைகள் பாராது தம் பணியை செவ்வனே செய்து அரும்பணியாற்றிவரும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அவரது சேவையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, ஊடகத்துறையில் தன்னலம் பாராது சிறந்த பணியாற்றிவரும் ஊடகவியலாளருக்கான விருது வழங்கலில் இவ்வருடத்தின் (2022) “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது” மெட்ரோ லீடர் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், ஊடகவியலாளரும், பல்துறைக்கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு, ஓய்வு பெற்ற அதிபரும், சமூக செயற்பாட்டாளரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான எம்.பி. அப்துல் ஹமீத், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல் நசார், நிந்தவூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எஸ்.ஜாரியா, இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர் ஏ.ஆர்.றிஸ்வானுல் ஜன்னாஹ் ஆகியோர் துறை சார்ந்து அவர்களது சேவையைப் பாராட்டி இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு இளைஞர் அமைப்பின் பிரதித் தலைவர் எஸ்.எம். சம்சித் ஆண்டின் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதைப் பெற்றுக்கொண்டதுடன் நிகழ்வில், புதிதாக இணைந்து கொண்ட இளைஞர், யுவதிகள் பலருக்கும் அங்கத்துவம் வழங்கப்பட்டதோடு, கல்விமான்கள், புத்திஜீவிகள், அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிழக்கு இளைஞர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஓர் சிறந்த அமைப்பாகும்.

இந்த நிகழ்வுக்கு கிழக்கு இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.எம். முபாரக் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஏ.சாபீர், கிழக்கு இளைஞர் அமைப்பினது பிரதித் தலைவர் எஸ்.எம். சம்சித், உதவித் தலைவர் எம்.எஸ்.ஏ. ஹர்பான், தொண்டர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ரீ.எம்.பைசின், பொருளாளர் ஆர்.எம். தன்சீம், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ. ஆர்.எப். சிரோனி, பிரதிச் செயலாளர் எம்.ஐ.எப்.சஜ்னா, உதவித் தலைவர் பி.நிலூ, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.எப்.றிஸ்னா, பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். சலீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அறிவிப்பாளர் ஏ.எம். இன்ஸாப், நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...