குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா தொற்று அதிகரித்துள்ளது!

Date:

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்புளுவன்ஸாவின் முக்கிய அறிகுறிகளாகும் என்று கூறிய அவர் மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறினார்.

இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும்  பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு தீபால் பெரேரா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், குழந்தைகளிடையே கொவிட் நோய் பரவுவதில் குறைவு இருப்பதாக நிபுணர் மருத்துவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...