அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சஜித் குற்றச்சாட்டு!

Date:

தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என கூறினாலும், டொலர்களை ஈட்டும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் போன்ற ஏற்றுமதி துறைகளுக்கு பாரிய வரிகளை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெல்லவாய தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எந்தவொரு எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வறிய நாகரீகம் மற்றும் மோசமான கலாசாரமாக இருந்த நாட்டை ராஜபக்சக்கள் இன்று உலகில் மிக மோசமான நாடாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் நாட்டில் சுபீட்சத்தை கொண்டு வருவதற்காக ஆரவாரத்துடன் வந்ததாகவும், ஆனால் இறுதியில் சுபீட்சத்தை இழக்கும் நிலைக்கு நாட்டை திவாலாக்கி விட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் கூறினார்.

Popular

More like this
Related

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...