எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காணாமல் போனோர் அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அவர்களின் குறைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, மேலதிகமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 100,000. வழங்க குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...