குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா தொற்று அதிகரித்துள்ளது!

Date:

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்புளுவன்ஸாவின் முக்கிய அறிகுறிகளாகும் என்று கூறிய அவர் மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறினார்.

இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பாடசாலைகள் மற்றும்  பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு தீபால் பெரேரா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், குழந்தைகளிடையே கொவிட் நோய் பரவுவதில் குறைவு இருப்பதாக நிபுணர் மருத்துவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...