ஒவ்வொரு மாதமும் 01 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறும் எனத் தெரிகிறது.
எரிபொருள் விலைச்சூத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சூத்திரத்தின்படி, முந்தைய எரிபொருள் விலை திருத்தம் கடந்த ஜூலை 17 அன்று திருத்தப்பட்டது, அதற்கமைய இன்று வரை விலை திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.