எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காணாமல் போனோர் அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அவர்களின் குறைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, மேலதிகமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 100,000. வழங்க குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...