வடமேற்கு துருக்கியில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Date:

துருக்கியின் இஸ்தான்புல் நகரம், தலைநகர் அங்காரா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேநிலையில் துருக்கியின் வடமேற்கு டஸஸ் மாகாணத்திலும் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 4:08 மணிக்கு   ஏற்பட்ட நிலநடுக்கம், கோலியகா மாவட்டத்தில், டஸ்ஸிலிருந்து வடமேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம், தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இப்பகுதியில் 70 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து மக்கள் பலர் பீதியுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறியதுடன் அப்பகுதியில் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...