அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

Date:

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு 10 பேரைக் கொன்றுள்ளார்.

அதே கடையின் கடை மேலாளர் என நம்பப்படும் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு செய்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரியும் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெர்ஜீனியா மாநில செனட்டர் லூயிஸ் லூகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது மாவட்டத்தில் உள்ள வெர்ஜீனியாவின் Chesapeake நகரின் வால்மார்ட் அங்காடியில் நடந்த அமெரிக்காவின் சமீபத்திய வெகுசன துப்பாக்கிச் சூடு சம்பவம் என் இதயத்தை நொறுக்கியது.

நம் நாட்டில் பல உயிர்களை பறித்த இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் வரை நான் ஓய மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...

சவூதி அரேபியாவில் பிறை (ஹிலால்) பார்த்தல்: மரபு – நீதித்துறை – அறிவியல் – தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங்கிணைப்பு.

சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும்...