‘பசில் வருகையால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்’

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்க பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ மற்றும் உறுப்பினர் பெரேரா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்ததை ஐக்கிய மக்கள் சக்தி இன்று கேள்வி எழுப்பியது.

அதேநேரம், அவர்களை சபைக்கு வெளியே அனுப்புமாறும் பாராளுமன்றத்தில் கோரியது.

இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா, பொலிஸ் ஆணைக்குழுவை இனி எவ்வாறு சுயாதீன அமைப்பாக கருத முடியும்? எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும், பசில் ராஜபக்ஷவை வரவேற்க விமான நிலையத்தில் சந்திரா பெர்னாண்டோ மற்றும் எம்.பி. பெரேரா ஆகியோர் இருந்ததை நாங்கள் கவனித்தோம்.

பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமானதாக இருக்க வேண்டும். எனவே, பசிலை வரவேற்க அந்த உறுப்பினர்கள் எப்படி அங்கு இருக்க முடியும்?’ என்று நளின் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்றும், அவர் எம்.பி கூட இல்லை , எப்படி பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

மரிக்காருக்குக்கு பதிலளித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்சவின் வருகையால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பதற்றமடைந்துள்ளனர் மற்றும் பசிலுக்கு பயந்துள்ளனர். இதனால்தான் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்,” என்றார்.

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...