‘பசில் வருகையால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்’

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்க பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ மற்றும் உறுப்பினர் பெரேரா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்ததை ஐக்கிய மக்கள் சக்தி இன்று கேள்வி எழுப்பியது.

அதேநேரம், அவர்களை சபைக்கு வெளியே அனுப்புமாறும் பாராளுமன்றத்தில் கோரியது.

இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா, பொலிஸ் ஆணைக்குழுவை இனி எவ்வாறு சுயாதீன அமைப்பாக கருத முடியும்? எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும், பசில் ராஜபக்ஷவை வரவேற்க விமான நிலையத்தில் சந்திரா பெர்னாண்டோ மற்றும் எம்.பி. பெரேரா ஆகியோர் இருந்ததை நாங்கள் கவனித்தோம்.

பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமானதாக இருக்க வேண்டும். எனவே, பசிலை வரவேற்க அந்த உறுப்பினர்கள் எப்படி அங்கு இருக்க முடியும்?’ என்று நளின் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்றும், அவர் எம்.பி கூட இல்லை , எப்படி பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்த அனுமதித்தார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

மரிக்காருக்குக்கு பதிலளித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்சவின் வருகையால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பதற்றமடைந்துள்ளனர் மற்றும் பசிலுக்கு பயந்துள்ளனர். இதனால்தான் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்,” என்றார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...