முன்னாள் பாப்பரசர் 16-ம் பெனடிக் உயிர்நீத்தார்!

Date:

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் இயற்கை எய்தியதாக வத்திகான் அறிவித்துள்ளது.

வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை 9.34க்கு அன்னாரது உயிர் இறையடி சேர்ந்ததாக வத்திகான் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகை, தனது வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

குறிப்பாக கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தமை இதுவே முதற்தடவை என கூறப்பட்டது.

பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகையின் இந்த அறிவிப்பு, பலரையும் ஆச்சரித்திற்கு உட்படுத்தியிருந்தது.

பாப்பரசர் ஒருவர் இறையடி எய்வதற்கு முன்னதாக பதவி விலகிய பாப்பரசராக பாப்பரசர் 12வது கிரிகோரி இருந்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...