வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம்!

Date:

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஜனவரி 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்காக தாய்லாந்திற்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த அரசாங்கத்தின் போது பங்களாதேஷுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...