தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று டிசம்பர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் 2894 வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த வருடம் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும் தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது. இதேவேளை, பரீட்சைக்கு முன்னதாக பிள்ளைகளை தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...