புத்தளம் மரிக்கார் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் இளமைக்காலம் முதல் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர்.
அந்தவகையில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் சமூக பிரச்சினைகளையும் கவிதைகளின் ஊடாக உணர்வு பூர்வமாக எழுதும் அவருடைய பாணி அலாதியானது.
எனவே அவருடைய கவிதைகளில் காணப்படுகின்ற கருத்துக்கள் வாசகர்களை கூடுதலாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அவருடைய கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கவிருக்கின்றோம்.
பாராளுமன்றம்..!
மூடர் கூடம்…
முழு நீள
முதியோர் இல்லம்…
வாய்களால் வாழ்வோரின்…
வாசஸ்தலம்…
தாவி விளையாடும்…
தவளைகளின் தடாகம்…
வரிசையில் நிற்காதோர்…
வந்துபோகும் இடம்…
களவும், பொய்யும்…
கொலையும் கற்குமிடம்….
மீசை வைத்த மிருகங்கள் கத்தும்…
Nursary வளாகம்…
நாக்குகளின்
நரகம்…!
ஒட்டுமொத்த கள்வர்கள்..
ஒளிந்திருக்கும் இடம்…
தேசத்தை தின்னும்…
பேய்களின் உணவு மண்டபம்…
ரகசியமாய் ரத்தம் உறிஞ்சும்…
அட்டைகளின் கொட்டில்…..
விலையுயர்ந்த கதிரையில் வீற்றிருக்கும்…
விஷ ஜந்துகளின் மாடம்…
கஞ்சா பயிரிடும்…
நடிகையின் வயல்….
நாட்டையே விற்கும்…
முகவர் நிலையம்…
வாக்குறுதிகள் தூக்கில் தொங்கும்…
வரலாற்று museum…
மக்கள் பிரதிநிதிகள்…
மக்களுக்கெதிராக வாக்களிக்கும்…
தேர்தல் நிலையம்…!
நமக்கு நாமே…
தேர்தல் மேடையில் தெரிவுசெய்த…
ஆப்புகளின் அரங்கம்…!!
###
225…
முகத்தை தவிர…
முழுவதும் ஒன்றுதான்…
தெரிவில் விழிப்போம்…!
அடுத்த Election இலேனும்…
அறிவைப் பிரயோகிப்போம்…!!
—
புத்தளம் மரிக்கார்