இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

Date:

இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு இன்று (09) புனித மக்கா நோக்கி பயணித்தனர். யாத்திரிகர்கள்  மதீனா விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு  2 விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில்,  இந்தாண்டு ஜம்மு-காஷ்மில் இருந்து 7,008 பயணிகள் சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஸ்ரீநகரின் பெமினா புறநகரில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்திற்கு அதிகாலை முதலே பயணிகள் வரத் தொடங்கினர்.

தொடர்ந்து,  ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  தலா 321 பயணிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு விமானங்கள் இன்று புறப்பட்டன.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...