கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச சத்திர சிகிச்சை

Date:

கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு புத்தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கண்ணில் வெள்ளை படர்தல் நோயினை இனங்காணும் பரிசோதனை  நாளை 07 சனிக்கிழமை முற்பகல் 09:30 மணிக்கு முன்னர் புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு வருகைத்தந்து தங்களின் பதிவினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உரிய தினத்தன்று இனங்காணப்படும் பயனாளிகளுக்கு மிக விரைவில் முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

எனவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள உரிய பயனானிகள் உரிய தினத்தன்று குவைத் வைத்தியசாலைக்கு வருகைத்தருமாறு வேண்டுகின்றோம்.

இதேவேளை கண்ணில் வெள்ளை படர்தல் நோய் தவிர்ந்த வேறு கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சைகள் (அதாவது மருந்தோ அல்லது முக்குக்கண்ணாடியோ) வழங்கப்படமாட்டாது

மேலதிக விபரங்களுக்கு:

தொலைபேசி: 032 2266480 தொலைநகல் 032 2267317

குவைத் வைத்தியசாலை நிர்வாகம் குவைத் மருத்துவமனை, 138, நெடுங்குளம் வௌன், புத்தளம்

Popular

More like this
Related

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...