‘இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை கடைகளில் விற்க முடியாது’

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால், முட்டைகளை எளிதில் இறக்குமதி செய்யக்கூடிய பல நாடுகளில் இருந்து பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதால், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் அதன் தேவையை கருத்தில் கொண்டு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகளை பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி அமைச்சர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொத்தலாவல அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பேக்கரி தொழிலில் இந்த முட்டைகளை கையாளும் போது கையுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் முட்டை ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பாக அழிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...