‘இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை கடைகளில் விற்க முடியாது’

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால், முட்டைகளை எளிதில் இறக்குமதி செய்யக்கூடிய பல நாடுகளில் இருந்து பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதால், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் அதன் தேவையை கருத்தில் கொண்டு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகளை பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி அமைச்சர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொத்தலாவல அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பேக்கரி தொழிலில் இந்த முட்டைகளை கையாளும் போது கையுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் முட்டை ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பாக அழிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...