மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார அமைச்சுக்கு முன்பாக இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
‘மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என குறித்த இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மின்சார அமைச்சை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.