தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

Date:

தேசிய சமாதான பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வமதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

அதற்கமைய தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்டம் கொடகவெல மற்றும் இறக்குவான பிரதேச சர்வ மதக் குழு உறுப்பினர்கள் இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்கான விஜயமாக கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ளனர்.

இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்காக கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வ மத குழு உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில்  சர்வமதக்குழு அங்கத்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு பிரதேச சர்வ மத குழு இணைப்பாளரும், மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா திட்ட முகாமையாளருமான து. நகுலேஸ்வரன் ஏற்பாட்டில் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதரும் பங்கேற்றார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...