புத்தளம் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Date:

புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு 1,40,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய, புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி மன்ற செயலாளரும், முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர் எச்.எம்.எம் சபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய அகில இலங்கை Y.M.M.A அமைப்பின்  புத்தளம் மாவட்டப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் தலைமையில் இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் திருமதி மஜிதாவிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி இந்த நன்கொடை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின்  பூரண அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...