புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு 1,40,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய, புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி மன்ற செயலாளரும், முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர் எச்.எம்.எம் சபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய அகில இலங்கை Y.M.M.A அமைப்பின் புத்தளம் மாவட்டப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் தலைமையில் இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் திருமதி மஜிதாவிடம் கையளிக்கப்பட்டன.
மேற்படி இந்த நன்கொடை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின் பூரண அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.