‘இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை கடைகளில் விற்க முடியாது’

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால், முட்டைகளை எளிதில் இறக்குமதி செய்யக்கூடிய பல நாடுகளில் இருந்து பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதால், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் அதன் தேவையை கருத்தில் கொண்டு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகளை பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி அமைச்சர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொத்தலாவல அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பேக்கரி தொழிலில் இந்த முட்டைகளை கையாளும் போது கையுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் முட்டை ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பாக அழிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...