புத்தளம் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Date:

புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு 1,40,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய, புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி மன்ற செயலாளரும், முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர் எச்.எம்.எம் சபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய அகில இலங்கை Y.M.M.A அமைப்பின்  புத்தளம் மாவட்டப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் தலைமையில் இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் திருமதி மஜிதாவிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி இந்த நன்கொடை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின்  பூரண அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...