‘முதுகெலும்பு இருந்தால் தமது பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்; புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யட்டும்’

Date:

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டை ஆள்பவர்கள்  கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளனர் எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் தமது பதவிகளை இராஜினாமா செய்து புதியதொருவரை மக்கள் தெரிவு செய்வதற்கு வழி வகுக்க வேண்டும்.

மேலும், நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் கேட்டுக் கொண்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றம் மார்ச் 3, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.

எனவே, அவர்கள் எடுத்த முடிவை உண்மையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள் என்று பேராயர்  கர்தினால் கூறினார்.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...