முட்டை விலை தொடர்பில் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டை விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி, கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டையை விற்பனை செய்வோருக்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முட்டைகள் விற்பனை செய்யப்படுமாயின் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவுக்கும் குறைவாக உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...