காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்!

Date:

2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமீபத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டபோது இது தெரியவந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையின் பின்னர் கோப் குழுவானது வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விசனம் தெரிவித்துள்ளார்.

காணி ஒதுக்கீட்டில் முறையான வரிசையை ஆணைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் குழு பரிந்துரைத்த போதிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...