கொழும்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம்!

Date:

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 908 வீடுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழில் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரகாரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் 420 வீடுகளும், திம்பிரிகஸ்யா பிரதேச செயலகத்தில் 120 வீடுகளும், கொலன்னா பிரதேச செயலகத்தில் 60 வீடுகளும், இரத்மலானை பிரதேச செயலகத்தில் 01 வீடும், மொரட்டுவை பிரதேச செயலகத்தில் 307 வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களாகும்.

கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...