பஸ் சாரதி மீது சிறுநீர் தாக்குதல்: பயணிகளும் சிறுநீரில் குளித்தனர்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் திவுலபிட்டிய டிப்போவிற்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் மீது மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்திய போது குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சாரதி ஒருவர் சிறுநீர் வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்தின் சாரதி போத்தலில் சிறுநீரை எடுத்துச் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், பஸ்சில் இருந்த பயணிகளும் சிறுநீரால் நனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இரு சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு காரணமாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...