மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது: அரசாங்கம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே ஆகிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தின் உயர் மட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் இதனை அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...