உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடு

Date:

உணவு பொருள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விளம்பரங்களை புதிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தி கடுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை மூன்றாம் தரப்பினர் ஊடாக செய்யும்போது அதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உணவுச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...

நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...