கொழும்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம்!

Date:

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 908 வீடுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழில் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரகாரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் 420 வீடுகளும், திம்பிரிகஸ்யா பிரதேச செயலகத்தில் 120 வீடுகளும், கொலன்னா பிரதேச செயலகத்தில் 60 வீடுகளும், இரத்மலானை பிரதேச செயலகத்தில் 01 வீடும், மொரட்டுவை பிரதேச செயலகத்தில் 307 வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களாகும்.

கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...