டெங்கு பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

Date:

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குமென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

67 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோய் பரவுதற்கான அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...