விமல் வீரவன்சவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

Date:

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய இளைஞர் சக்தி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள ‘நவய செங்கவுனு கதாவ’ என்ற நூல் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது இராணுவத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக வீரவன்ச, பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் இராணுவம் ஜனாதிபதி உத்தரவுகளை ஏற்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவரின் தாளத்திற்கு ஏற்றபடி ஆடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் ஐக்கிய இளைஞர் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சில இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே விமல் வீரவன்சவின் நூலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...