பசிலின் மல்வானை ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது: நீதியமைச்சர்

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மல்வானையில் உள்ள இந்த சொத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என பத்திரிகைகள் மூலம் அறிந்துக்கொண்ட பின்னர், அதனை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...