ரயில்வே பிரச்சினையை தீர்க்க மற்றுமொரு கலந்துரையாடல்!

Date:

புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மின்சார ஊழியர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் திடீர் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ரயில் பாதைகளிலும் ரயில் தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதையும் காண முடிந்தது.

இது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரை இன்று காலை சந்திக்க ரயில்வே மின்சார ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Popular

More like this
Related

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...