நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கென உலக அளவிலான அமைப்பை ஆரம்பித்தது சவூதி அரேபியா!

Date:

உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஒரு  அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார்.

உலகின் நீர் விநியோகச் சிக்கல்களைச் சீர்செய்யும் தூர நோக்கோடு இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான சவூதி அரேபியாவின் கரிசனைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது.

உலகளாவிய நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான பிற நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்தி அவற்றோடு சேர்ந்து பயணிப்பதற்கு இவ்வமைப்பு முயற்சிக்கிறது.

அத்தோடு இந்நிறுவனம், பிற நாடுகள் மற்றும் நிறுவனங்களோடு இணைந்து நீர் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப அமைப்புகளை  மேம்படுத்தவும், புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்கிறது. மேலும் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான உயர் திட்டங்களை உருவாக்குவதற்கும் நிதியளிப்பதற்கும், உலக நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் அனைத்து மக்களுக்கும் நீரை பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துவதிலும் இந்நிறுவனம் அக்கறை செலுத்துகிறது.

சவூதி அரேபியா ஆக்கபூர்வமான சுதேச முறைமைகளைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நீர் சுத்திகரிப்பு, பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் அடைந்த கணிசமான முன்னேற்றங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. நான்கு கண்டங்களில் உள்ள பல்வேறு நீர் பதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக 6 பில்லியனுக்கும் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி சவூதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு, தங்கள் தேசிய நிகழ்ச்சி நிரல்களில் நீர்வள பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளுடனும், தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகளுடனும் இணைந்து பணியாற்றவிருக்கிறது. 2050 ஆம் ஆண்டளவில் உலகின் தண்ணீர் தேவை இரட்டிப்பாகும் மற்றும் உலக சனத்தொகை 9.8 பில்லியன் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், சவூதியின் இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

(எழுத்து- காலித் ரிஸ்வான்)

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...