சட்டத்தரணிகள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அதிருப்தி!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

உயிருக்கு அஞ்சாமல் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் சட்டத்தரணிகளுக்கு இருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கலகெதர நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஒருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலகெதர நீதிமன்ற அமர்வில் இருக்கும் போது பெண் சட்டத்தரணி ஒருவரின் பாதுகாப்பு சவால் செய்யப்பட்ட சம்பவத்தை சங்கம் தீவிரமாக கவனத்திற்க் கொள்கிறது என கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பல சட்டத்தரணிகள் ஆஜராகி நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த பெண் சட்டத்தரணிக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, உறுப்பினர்களின் உரிமைகள் குறிப்பாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஏனைய விடயங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...