செங்கோலை தொட்டமையினால் அஜித் மன்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, அஜித் மன்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வாய்மூல கேள்வி பதிலுக்காக நேரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்பட்ட அமைதி இன்மையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும செங்கோலை தொட்டமையினால் அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...