செங்கோலை தொட்டமையினால் அஜித் மன்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, அஜித் மன்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வாய்மூல கேள்வி பதிலுக்காக நேரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்பட்ட அமைதி இன்மையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும செங்கோலை தொட்டமையினால் அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...