அல்-ஹாஜ் கலாநிதி ஹஸன் மௌலானா ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமனம்!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச சமாதான மாநாடு 2023 கடந்த 03ம் திகதி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபககார்த்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதான தூதுவர், பேராசிரியர். டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கெளரவ கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...