உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: மெதகம தம்மானந்த தேரர்!

Date:

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக தமது பீடத்தினருடன் விரிவாக ஆராய்ந்த பின்னரே தமது கருத்துக்களை வெளியிட முடியுமென அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தினால் கடந்த மாதம் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து அவ்விரு பீடங்களும் இணைந்து அச்சட்டமூலத்தை ஆராய்ந்து, தமது நிலைப்பாடுகளை அறியத்தருவதாக மல்வத்துபீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியபீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய மகாவிகாரை சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இந்த உத்தேச சட்டமூலமானது நல்லிணக்கப்பொறிமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...